கோக்குமாக்கு

         சில விஷயங்கள் தனிப்பட்ட முறையில் நமக்கு பிடிக்காவிட்டாலும், நம்மை அவ்வுளவாக ஈர்க்காவிட்டாலும், சில சூழ்நிலைகளில் நமக்கு அவற்றை பிடிக்கும் என்று பச்சையாக இவ்வுலகிற்கு காட்டவேண்டி உள்ளது. இப்படி அந்த பொய்யான விஷயத்தை சமுதாயத்தில் வேறுபடுத்தி காட்டியே, பின் ஒரு நாளில் அந்த பிடிக்காத விஷயம் வேறு வழியே இல்லாமல் நமக்கு பிடித்தும் பொய் விடுகிறது என்பதே நிதர்சனம்!

          மனித மூளை என்பது இயற்கையாகவே முரண்பாடுகளை நிறைய விரும்பும்! ஏதாவது ஒரு பருப்பொருளில் வித்தியாசமோ, முரணோ இருக்குமாயின் மனித மனமானது அதன்பால் ஈர்க்கப்படும்! அது எவ்வாறெனில், ஒரு உதாரணம்:

       நாம் காண்கின்ற சினிமாவில் realisticஆன விஷயங்கள் இருந்தால் நமக்கு பிடிக்கும். சினிமாத்தனமான படங்களை  பார்த்து பார்த்து அலுத்து விட்டது நமக்கு! ஏதாவது ஏடாகூடம் நமக்கு அவசியம் தேவைப்படுகிறது!

       அதுபோல், real வாழ்கையில் cinematic விஷயங்கள் நடந்தால் நமக்கு பிடிக்கும்! கண்டிப்பாக வாழ்வில் சற்று வித்யாசமான, கோக்குமாக்கான  சம்பவங்கள் இடம்பெற்றால் தான் thrillஆக இருக்கும்!


        நிற்க! ஒரு நிமிஷம், இப்ப நான் என்ன சொல்ல வர்ரேன்?  நான் பாட்டுக்கு எதேதோ பேசிட்டே போறேன்! சரி அத விடுங்க, அடுத்த சிறுகதைய போஸ்ட் பண்றதுக்கு ஒரு ரெண்டு நாள் ஆகும். அத சொல்றதுக்குதான் வந்தேன்.

        அது என்னமோ தெரியலீங்க, பேனாவ கையில புடிச்சா அப்டியே நாங்களும் பெரிய சிந்தனையாளர்னு தோணுது... தப்பா  நெனச்சுக்காதீங்க,  குறைத்துக்கொள்கிறேன்!!!