அடியேய், தமிழே!
ரெண்டா யிரமாண்டுகளுக்குமுற் பட்டவளே - உயிரு
முடலும் இணைத்து உலகினுக்கே உருவெடுத்தவளே
உண்டோடி நின்கவி னுக்கோரீடு - நுரையுங்
கடலும் போலுயிரில் இரண்டறக்கலந்தவளே -நின்னுருவங்
கண்டோ, நித்தமும் பிறவிப்பயனெய்துகிறேன் - வெறும்
மடலும் கவியும் இயலு மிசையும்
கொண்டா வுனைத் துதிக்கிறேன்? என்னுயிரிழைத்து
அனுதினமு முனை தொழுது நிற்கிறேன்!
முடலும் இணைத்து உலகினுக்கே உருவெடுத்தவளே
உண்டோடி நின்கவி னுக்கோரீடு - நுரையுங்
கடலும் போலுயிரில் இரண்டறக்கலந்தவளே -நின்னுருவங்
கண்டோ, நித்தமும் பிறவிப்பயனெய்துகிறேன் - வெறும்
மடலும் கவியும் இயலு மிசையும்
கொண்டா வுனைத் துதிக்கிறேன்? என்னுயிரிழைத்து
அனுதினமு முனை தொழுது நிற்கிறேன்!
நல்பெற்றோளை பெற்றேனே!
எம்மை ஈன்றெடுத்த கண்ணறி தெய்வமே,
வறண்ட பூமிக்கோர் கூர்மேகமென எனக்கே
உம்மை பொழிந்தாயே! கடுங்குளிரென அன்று
இருண்ட என்வாழ்வில் நீ தேவதையாய்
வெம்மைச் சுடரேந்தி சுகமாய் அரவணைத்தாயே
ஆயிர மாயிரம் உறவுகள் கூடினும் இச்
செம்மை யினளுக்கோர் ஈடிணையில்லையே- இனி
என் காலமுழுதும் உன் காலடிக்கே!
ஏட்டில் இல்லாப் பாடத்தைக் கொணர்ந்தவள்
எந்தாய், பசித்த போது எனக்கென
ஊட்டிய ஒருவாய் சுடுசோறைப்போலும்- ஐந்தகவையில்
பாசத்தோடு என் மானங்காக்க
மாட்டிய அரைக்கால் சட்டையைப்போலும்- புகழ்வது
புறமெனவறிந்தும் புன்முறுவலோடு கேட்பதைப்போலும்-நீ
காட்டிய தந்தையைப் போலும்- இவ்வுலகில்
நானறிந்த சிறந்தது வேறொன்று மில்லையே!
வறண்ட பூமிக்கோர் கூர்மேகமென எனக்கே
உம்மை பொழிந்தாயே! கடுங்குளிரென அன்று
இருண்ட என்வாழ்வில் நீ தேவதையாய்
வெம்மைச் சுடரேந்தி சுகமாய் அரவணைத்தாயே
ஆயிர மாயிரம் உறவுகள் கூடினும் இச்செம்மை யினளுக்கோர் ஈடிணையில்லையே- இனி
என் காலமுழுதும் உன் காலடிக்கே!
ஏட்டில் இல்லாப் பாடத்தைக் கொணர்ந்தவள்
எந்தாய், பசித்த போது எனக்கென
ஊட்டிய ஒருவாய் சுடுசோறைப்போலும்- ஐந்தகவையில்
பாசத்தோடு என் மானங்காக்க
மாட்டிய அரைக்கால் சட்டையைப்போலும்- புகழ்வது
புறமெனவறிந்தும் புன்முறுவலோடு கேட்பதைப்போலும்-நீ
காட்டிய தந்தையைப் போலும்- இவ்வுலகில்
நானறிந்த சிறந்தது வேறொன்று மில்லையே!
Subscribe to:
Posts (Atom)

