நிதர்சனம்

____________________________________________________________________________________________________


"அப்துல் கலாம் சொல்வதில்தான்  நியாயம் இருக்கிறது!!!"
என்னடா இவன் அப்துல் கலாமை பற்றி இந்த டயலாக்  சொல்கிறானே என்று குழம்பி போகாதீர்கள். இதை படித்து முடிக்கையில், உங்களுக்கு புரியும்!!!

மாலை நேரம், தாம்பரம் இரயில் நிலையம்.

சகித்துக்கொள்ளும்படியான வெயில், அவசர அவசரமாக விழுப்புரத்திற்கு டிக்கெட் எடுத்து விட்டு நேராக ஒன்பதாம் நம்பர் பிளாட்பாரத்திற்கு விரைந்தேன்!!!

ஒலிப்பெருக்கியில் அறிவிப்புகளை தெரிவிக்கும் அந்த பெண்ணின் குரல் என் செவிகளில் பாட்டு பாடுவது போல் திரும்ப திரும்ப ஒலித்துகொண்டிருந்தது!!! பற்றாக்குறைக்கு, அவளோடு நானும் சேர்ந்து அறிவிப்பை ராகத்தோடு வாசித்துக்கொண்டிருந்தேன். இரண்டு வருடங்களாக ஒரே இரயிலில் பயணம் செய்வதால் எனக்கு ஏற்பட்ட சங்கீத ஞானம் அது!!!

பத்து ரூபாய்க்கு ஒரு lays பாக்கெட், ஒரு கப் டீ இவற்றை வாங்கிக்கொண்டு ஏதோ ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறினேன். நான் உட்கார்ந்த இருக்கையில் நடுத்தர வயது உள்ள இரு
நபர்கள் வந்து உட்கார்ந்தனர். பார்த்த மாத்திரத்தில் இருவரும் பொறுப்பான அரசு அதிகாரிகள் என்று தெரிந்தது. நிறைய பேசிக்கொண்டே வந்தனர். (கவனிக்கவும், பொறுப்பான அரசு அதிகாரிகள் என்ற உடனே, வேறு எதுவும் கற்பனை செய்ய வேண்டாம்...)


சற்று நேரத்தில் இரயில் கிளம்பியது, நானும் lays பாக்கெட்டை பிரிக்க ஆயத்தமானேன். இதற்குள் அந்த இரு அரசாங்க ஆசாமிகளின் பேச்சு நம் நாட்டின் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் சென்றது..


அரசாங்க ஆசாமி 1: நம்ம நாட்ட கெடுக்கறதே  இந்த அரசியல்வாதிங்கதான். அவனுங்கள சொல்லணும். நல்லா முன்னேர்ற நம்ம நாட லஞ்சத்துக்கு அடிமைபடுத்தி
நாசமாகிட்டனுங்க.

அரசாங்க ஆசாமி 2: "அரசியலுக்கு வந்து நாட்ட முன்னேத்தராங்களோ இல்லியோ, ஒரு தடவஆட்சிக்கு வந்துட்டா பணத்த கொள்ளைஅடிக்காம போக மாட்டானுங்க"

அரசாங்க ஆசாமி 1: "நம்ம நாட்ல தான் இப்படி எல்லாம்.. போன வருஷம் சிங்கபூர்  போயிருந்தேன்ல,ப்பா  ஊர் என்னமா இருக்கு!!! அரசியல்வாதிங்க எல்லாம்  நாட்டுக்கு என்னமா உழைக்கறாங்க! ஊரே  அவ்ளோ சுத்தமா இருக்குப்பா!" என்று பேசிக்கொண்டே தன் கையில் இருந்த  டீ கப்பை கீழே போட்டார், அதில் சற்று டீ மீதம் இருந்ததால் கீழே விழுந்ததும் டீ சிதறிவிட்டது!


இவர்கள் சொல்வதில் நியாயம் உள்ளது என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டேன். இதற்குள் lays பாகேட்டும் தீர்ந்து போகவே, அதை  சீட்டிற்கு அடியில் போட்டு விட்டேன்!


சற்று நேரத்தில், சமோசா விற்பவன் தன்னுடைய கட்டை குரலினால் மேஜர் சுந்தரராஜன் போன்று  "சமோஸ் சமோஸ்"  என்று விற்றுக்கொண்டு வந்தான். அவனிடம் பத்து ரூபாய் கொடுத்து நாலு சமோசா வாங்கினேன். அவன் அதை லாவகமாக ஒரு பேப்பரில் மடித்து எனக்கு கொடுத்தான். பத்து நிமிடத்தில் செங்கல்பட்டு வந்தது, சமோசா அதற்குள்  காலியாகிவிட்டது. மடித்து கொடுத்த பேப்பரில் விரல்களை துடைத்தேன்.


சுண்டல், கடலை போன்ற வஸ்துக்களை வாங்கும்போது இலவச இணைப்பாக வருகின்ற அந்த பிட்டு பேப்பரை படிப்பது  எனக்கு அலாதி இன்பம் தரக்கூடியது. அது குங்குமமோ, ஆனந்த விகடனோ, அல்லது மூன்றாம் கிளாஸ் படிக்கும் சிறுவர்களின் நோட்டு புத்தகமோ... படித்து விட்டுதான் கீழே போடுவது!!!


அந்த வகையில், இன்று எனக்கு மேஜர் சுந்தரராஜன் கொடுத்தது ஒரு செய்தித்தாள்! அது அப்துல் கலாம் அவர்கள் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி! அது,

"நம் நாடு ஒழுங்காக இல்லை, இத்தனை வளங்கள் இருந்தும் இன்னும் ஏழை நாடாக தானே உள்ளோம். நாட்டை இந்த நிலைமைக்கு ஆக்கியது அரசியல்வாதிகள்தான் என்று நீங்கள் சொல்லாதீர்கள்!

சிங்கபூருக்கு போகிறீர்கள், சிங்கபூர் விமான நிலையத்தில் இறங்கிய உடன் உங்களில் பலபேர் சிறந்த மனிதர்களாக மாறிவிடுகிறீர்கள். ஒரு துண்டு பேப்பரை கூட தெருக்களில் போடுவது இல்லை,  கண்ட இடத்தில எச்சில் துப்புவது இல்லை, சுவற்றில் சிறுநீர் கழிப்பதும் இல்லை.

சிங்கப்பூரில் மட்டும் தான் நீங்கள் சிறந்த மனிதனாக வாழ்வீர்களா? ஏன் இந்தியாவில் மட்டும் இப்படி?"

என்று எழுதி இருந்தது! இதை படித்து முடித்த உடனே, அந்த அரசாங்க ஆசாமி 1: கிராபிக்ஸ்-இல் என் மூளையில்   தோன்றி, சிங்கப்பூரில் எப்படி இருந்திருப்பார்  என்று நடித்து காட்டினார்... சிரிப்பாக வந்தது. ஆயிரம்தான் பேசினாலும் யதார்த்தம் என்பது இதுதான் என்று தெரிந்து கொண்டேன்!


நானும் கீழே போட்ட lays பாக்கெட்டை எடுத்து குப்பைதொட்டியில்  போட்டுவிட்டு என் இருக்கையில் உட்கார்ந்து வீடு போய் சேர்ந்தேன்!!!

இப்போது புரிகிறதா!!! நான் ஏன் அப்துல் கலாம் பற்றி டயலாக் சொன்னேன் என்று???

என் முதல் படைப்பு!!!

நான் அக்மார்க் நல்லவனா??? 

___________________________________________________________


ஏய், மூனாறு ரூபா சில்லறையா குடுப்பா!!-
அண்ணே, ஒரு கேகே நகர் தாங்கண்ணே-
ஐய, சொம்மா ஓரசினேகிறியே, கொஞ்சம் தள்ளி நில்லுயா-
இன்ன யம்மா, என்னபோய் ஓரசரன்றியே -
யோவ் கருப்பு சட்ட, சீட்டு வாங்கிட்டியா???

என பேருந்திற்கு உரிய சம்பாஷனைகளுடன், அழுக்கு சகிதமாய் புழுதி பறக்க கிராமத்து பாதையில் சென்று கொண்டிருந்தது நான் அமர்திருந்த அரசு பேருந்து!!!


நல்லவேளையாக, நான் செய்த அவசர கால reservation என்னை ஜன்னல் ஓர சீட்டில் உட்கார வைத்தது!!!

 ஆம், பேருந்து, பேருந்து நிலையத்திற்கு வந்த உடன் சட்டைப்பையில் இருந்த என் கைக்குட்டையை ஜன்னல் வழியாக ஒரு சீட்டில் போட்டு விட்டேன், அதன் பயனாக ஜன்னல் ஓர சீட்!!!


அரசு பேருந்துகளில் இருக்கின்ற எழுதப்படாத சட்டம் இது!!! இந்த சட்டத்திற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன?


எனக்கு என் சீனியர் ஆபீசர் குமரன் சார் மீது கோபம்!!! ஆம், ஏற்கனவே எனக்கும் அந்த ஆளுக்கும் ஆகாது, இந்த எழவுல தேவையில்லாம பிரச்சனைல மாட்டிகிட்டேன்…


ஒரு ரெண்டு நாள் சொல்லாம கொள்ளாம அம்மாவ பாக்க ஊருக்கு போய்ட்டேன்!!! அதனால வியாழகெழம போக வேண்டிய files எல்லாம் திங்ககிழம தான் பொய் சேந்துதாம்!!! இதனால companyக்கு கெடைக்க வேண்டிய project கை நழுவி போச்சாம்!!!
போன மாசம் தான் promotion தருவதாக சொன்னார்கள், அதற்குள் இப்படி ஆகிவிட்டதால், என் promotion அவ்வுளவுதான்… வர்ற பணத்த வச்சி, லோன் போட்டு, ஒரு two wheeler வாங்கலாம்னு பாத்தேன்!!! முடிவெல்லாம் பண்ணி வச்சிருந்தேன்… அது நீல நிற ஸ்டார் சிட்டி…


இனி எப்படியும் promotion வர, ரெண்டு மூணு மாசம் ஆகும், அது வரைக்கும் இப்படி அவசர கால முன்பதிவு செஞ்சு தான் வீட்டுக்கு போகனும்!!!
null
ச்சே, என்ன வாழ்கைடா இது…???
ஜன்னல் ஓரமாக சூடான அனல் காற்று வீசியது. சற்று சாய்ந்து உட்கார்ந்தேன், நீண்ட பெருமூச்சு விட்டு எனது செல் போனை தேடினேன். பையில் இருந்து ஹெட்செட்டை எடுத்தால், அது இடியாப்பம் போல் சிக்கி கொண்டு இருந்தது!! இந்த ஹெட்செட்டை சிக்கலில் இருந்து பிரித்து எடுப்பது என்பது ஒரு ஜால வித்தை!!! முதலில் அதன் ஒரு நுனியினை கண்டுபிடித்து பின் ஒவ்வொரு சிக்கல் வழியாக அதனை நுழைத்து எடுக்க வேண்டும்… இவ்வாறாக செய்தால், பிரித்து விடலாம்… இறுதியில் எனக்கு வெற்றி!!!
காதில் மாட்டிக்கொண்டு fmஐ ஆன் செய்தேன், குர் கொர் என கத்ததொடங்கியது,அந்த fm … போனை சற்று ஜன்னலருகே கொண்டு சென்றேன். என் போன் ஜன்னலுக்கு வெளியே சென்ற fm அலைகளை பிச்சை எடுத்து, “காதலின் தீபம் ஒன்று” என்ற பாட்டை என் காதுகளுக்கு தானம் பண்ணியது.


குமரன் சார் promotion கொடுப்பாரா? வண்டி வாங்கிட முடியுமா??? என்று பல்வேறு எண்ணங்கள் என் உள்ளத்தில் ஓடின… நாளை என்ன ஆகபோகிறது என்பதை நினைத்தால் பீதியும் பயமும் ஒன்றாக என் நெஞ்சில் உட்கார்ந்து கொள்வதை என்னால் உணர முடிந்தது!!!
இதற்கிடையில் எனது அருகில் இருந்த ஜன்னலை மூடும் தாழ்பாலானது டக டகவென ஆடிக்கொண்டிருந்தது. லேசாக தலையை சாய்த்து பார்த்தேன், அந்த தாழ்பாலானது நேராக நிற்க துப்பில்லாமல், கீழே விழவும் முடியாமல், ஜன்னலோடு புரட்சி போராட்டம் பண்ணிக்கொண்டு இருந்தது!!! ஜன்னலில் இருந்து அதை விடுவித்து அதற்கு சாப விமோசனம் கொடுத்தேன்!
திடீரென்று ஓட்டுனர் பேருந்து வேகத்தை குறைத்தார், இறுதியில் engineஐ அதன் இயக்கத்தில் இருந்து ஓய்வு கொடுத்து, வெளியே சென்று விட்டார்!!! என்ன என்று ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன், வழக்கம் போல் accident ஒன்று அருகாமையில் அரங்கேறி இருந்தது. இதற்குள் பேருந்தில் இருந்த பாதி கூட்டம் குறைந்து விட்டது. நம் நாட்டு கலாச்சாரத்தை நானும் மதிப்பவனாதலால், என்ன ஆயிற்று என்பதை கூட்டத்தோடு கூட்டமாக காண, நானும் இறங்கினேன்!!! அந்த நபர் குப்புற படுத்துக்கிடந்தார், இறந்து விட்டாரா, அல்லது மயக்கத்தில் உள்ளார என்பதை சொல்ல முடியவில்லை. காலில், முதுகில் கைகளில் என அனைத்து இடங்களிலும் பலமான அடி. ஏய் யாராவது ambulanceஐ கூப்புடுங்கப்பா, என யாரோ ஒருவர் சொன்னார்! செல் போன் என்னிடம் இருந்தது, கால் செய்து இருக்கலாம் ஆனால், வேறு யாரவது செய்யட்டுமே என்று நினைத்தேன்!
இதற்குள் traffic clear ஆகி விட்டது, நான் வந்த பேருந்தும் கிளம்ப தயாரானது! பேருந்தை நோக்கி நானும் ஓடினேன், அச்சமயம் தற்செயலாக என் கண்கள் விபத்திற்கு உள்ளான அந்த நபரின் வண்டியை நோக்கியது!
அந்த நிமிடம் எனக்கு தூக்கி வாரி போட்டது!


நீல நிற எழுத்தில் “குமரவேல்” என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வெய்யிலில் ஜொலித்தது!

ஆம், என்னுடைய சீனியர் ஆபீசர் குமரன் சார் தான்! ஐய்யயோ இவரா? உடனே விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தேன்!! அவர் சட்டை பையில் இருந்து போனை எடுத்து அவரது மனைவிக்கு போன் செய்தேன், உடம்பில் சிறு அசைவுகள் தெரியவே,உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் மனைவியிடம் பொய் சொன்னேன். அவருடைய blood group என்ன என்பதையும் தெரிந்து கொண்டேன். இதற்குள் ambulance வரவே, அவரை தூக்கி ambulanceஇல் கிடத்தி, நானும் ஏறினேன்!


எனது நண்பனுக்கு போன் செய்து, b+ve blood உள்ள யாராவது ஒருத்தரை கூட்டிக்கொண்டு நாங்கள் செல்லும் மருத்துவமனைக்கு வர சொன்னேன், சற்று நேரத்தில் மருத்துவமனை வந்தது. எனது நண்பன் மட்டும்தான் வந்து இருந்தான்.என்ன என்று கேட்டால் அவனுக்கும் அதே ரத்த வகை தானாம். உடனே அட்மிட் செய்தோம். சினிமாக்களில் வருவதை போன்று டாக்டர்களும் நர்ஸ்களும் போவதும் வருவதுமாக இருந்தார்கள்!!!


சற்று நேரத்தில், மருத்துவர் வந்து, வெல் டன் மிஸ்டர் ரவி. சரியான நேரத்துல வந்ததுனால இவர் உயிர் காப்பாத்தபட்டுருக்கு!!! ஒரு வாரத்துல discharge பண்ணிடலாம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்!!!


ஒரு வாரம் கழித்து நான் அலுவலகத்திற்கு இருக்கும் போது குமரன் சார் வந்தார்… தலையில் சின்ன bandage, கையில் புத்தூர் கட்டு. வந்த உடனே மேனேஜர் ரூமுக்கு போய் விட்டார்!!! சற்று நேரத்தில் என்னை கூப்பிட்டு, ப்ரோமோஷன் சான்றிதழையும், increment ஆர்டரையும் கண்ணீர் மல்க கையில் கொடுத்தார்….


நன்றி சொல்லிவிட்டு நேராக T.V.S. SHOWROOM ஐ நோக்கி– நடந்தேன்!!


இப்ப நீங்க சொல்லுங்க நான் என்ன அக்மார்க் நல்லவனா?