என் முதல் படைப்பு!!!

நான் அக்மார்க் நல்லவனா??? 

___________________________________________________________


ஏய், மூனாறு ரூபா சில்லறையா குடுப்பா!!-
அண்ணே, ஒரு கேகே நகர் தாங்கண்ணே-
ஐய, சொம்மா ஓரசினேகிறியே, கொஞ்சம் தள்ளி நில்லுயா-
இன்ன யம்மா, என்னபோய் ஓரசரன்றியே -
யோவ் கருப்பு சட்ட, சீட்டு வாங்கிட்டியா???

என பேருந்திற்கு உரிய சம்பாஷனைகளுடன், அழுக்கு சகிதமாய் புழுதி பறக்க கிராமத்து பாதையில் சென்று கொண்டிருந்தது நான் அமர்திருந்த அரசு பேருந்து!!!


நல்லவேளையாக, நான் செய்த அவசர கால reservation என்னை ஜன்னல் ஓர சீட்டில் உட்கார வைத்தது!!!

 ஆம், பேருந்து, பேருந்து நிலையத்திற்கு வந்த உடன் சட்டைப்பையில் இருந்த என் கைக்குட்டையை ஜன்னல் வழியாக ஒரு சீட்டில் போட்டு விட்டேன், அதன் பயனாக ஜன்னல் ஓர சீட்!!!


அரசு பேருந்துகளில் இருக்கின்ற எழுதப்படாத சட்டம் இது!!! இந்த சட்டத்திற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன?


எனக்கு என் சீனியர் ஆபீசர் குமரன் சார் மீது கோபம்!!! ஆம், ஏற்கனவே எனக்கும் அந்த ஆளுக்கும் ஆகாது, இந்த எழவுல தேவையில்லாம பிரச்சனைல மாட்டிகிட்டேன்…


ஒரு ரெண்டு நாள் சொல்லாம கொள்ளாம அம்மாவ பாக்க ஊருக்கு போய்ட்டேன்!!! அதனால வியாழகெழம போக வேண்டிய files எல்லாம் திங்ககிழம தான் பொய் சேந்துதாம்!!! இதனால companyக்கு கெடைக்க வேண்டிய project கை நழுவி போச்சாம்!!!
போன மாசம் தான் promotion தருவதாக சொன்னார்கள், அதற்குள் இப்படி ஆகிவிட்டதால், என் promotion அவ்வுளவுதான்… வர்ற பணத்த வச்சி, லோன் போட்டு, ஒரு two wheeler வாங்கலாம்னு பாத்தேன்!!! முடிவெல்லாம் பண்ணி வச்சிருந்தேன்… அது நீல நிற ஸ்டார் சிட்டி…


இனி எப்படியும் promotion வர, ரெண்டு மூணு மாசம் ஆகும், அது வரைக்கும் இப்படி அவசர கால முன்பதிவு செஞ்சு தான் வீட்டுக்கு போகனும்!!!
null
ச்சே, என்ன வாழ்கைடா இது…???
ஜன்னல் ஓரமாக சூடான அனல் காற்று வீசியது. சற்று சாய்ந்து உட்கார்ந்தேன், நீண்ட பெருமூச்சு விட்டு எனது செல் போனை தேடினேன். பையில் இருந்து ஹெட்செட்டை எடுத்தால், அது இடியாப்பம் போல் சிக்கி கொண்டு இருந்தது!! இந்த ஹெட்செட்டை சிக்கலில் இருந்து பிரித்து எடுப்பது என்பது ஒரு ஜால வித்தை!!! முதலில் அதன் ஒரு நுனியினை கண்டுபிடித்து பின் ஒவ்வொரு சிக்கல் வழியாக அதனை நுழைத்து எடுக்க வேண்டும்… இவ்வாறாக செய்தால், பிரித்து விடலாம்… இறுதியில் எனக்கு வெற்றி!!!
காதில் மாட்டிக்கொண்டு fmஐ ஆன் செய்தேன், குர் கொர் என கத்ததொடங்கியது,அந்த fm … போனை சற்று ஜன்னலருகே கொண்டு சென்றேன். என் போன் ஜன்னலுக்கு வெளியே சென்ற fm அலைகளை பிச்சை எடுத்து, “காதலின் தீபம் ஒன்று” என்ற பாட்டை என் காதுகளுக்கு தானம் பண்ணியது.


குமரன் சார் promotion கொடுப்பாரா? வண்டி வாங்கிட முடியுமா??? என்று பல்வேறு எண்ணங்கள் என் உள்ளத்தில் ஓடின… நாளை என்ன ஆகபோகிறது என்பதை நினைத்தால் பீதியும் பயமும் ஒன்றாக என் நெஞ்சில் உட்கார்ந்து கொள்வதை என்னால் உணர முடிந்தது!!!
இதற்கிடையில் எனது அருகில் இருந்த ஜன்னலை மூடும் தாழ்பாலானது டக டகவென ஆடிக்கொண்டிருந்தது. லேசாக தலையை சாய்த்து பார்த்தேன், அந்த தாழ்பாலானது நேராக நிற்க துப்பில்லாமல், கீழே விழவும் முடியாமல், ஜன்னலோடு புரட்சி போராட்டம் பண்ணிக்கொண்டு இருந்தது!!! ஜன்னலில் இருந்து அதை விடுவித்து அதற்கு சாப விமோசனம் கொடுத்தேன்!
திடீரென்று ஓட்டுனர் பேருந்து வேகத்தை குறைத்தார், இறுதியில் engineஐ அதன் இயக்கத்தில் இருந்து ஓய்வு கொடுத்து, வெளியே சென்று விட்டார்!!! என்ன என்று ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன், வழக்கம் போல் accident ஒன்று அருகாமையில் அரங்கேறி இருந்தது. இதற்குள் பேருந்தில் இருந்த பாதி கூட்டம் குறைந்து விட்டது. நம் நாட்டு கலாச்சாரத்தை நானும் மதிப்பவனாதலால், என்ன ஆயிற்று என்பதை கூட்டத்தோடு கூட்டமாக காண, நானும் இறங்கினேன்!!! அந்த நபர் குப்புற படுத்துக்கிடந்தார், இறந்து விட்டாரா, அல்லது மயக்கத்தில் உள்ளார என்பதை சொல்ல முடியவில்லை. காலில், முதுகில் கைகளில் என அனைத்து இடங்களிலும் பலமான அடி. ஏய் யாராவது ambulanceஐ கூப்புடுங்கப்பா, என யாரோ ஒருவர் சொன்னார்! செல் போன் என்னிடம் இருந்தது, கால் செய்து இருக்கலாம் ஆனால், வேறு யாரவது செய்யட்டுமே என்று நினைத்தேன்!
இதற்குள் traffic clear ஆகி விட்டது, நான் வந்த பேருந்தும் கிளம்ப தயாரானது! பேருந்தை நோக்கி நானும் ஓடினேன், அச்சமயம் தற்செயலாக என் கண்கள் விபத்திற்கு உள்ளான அந்த நபரின் வண்டியை நோக்கியது!
அந்த நிமிடம் எனக்கு தூக்கி வாரி போட்டது!


நீல நிற எழுத்தில் “குமரவேல்” என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வெய்யிலில் ஜொலித்தது!

ஆம், என்னுடைய சீனியர் ஆபீசர் குமரன் சார் தான்! ஐய்யயோ இவரா? உடனே விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தேன்!! அவர் சட்டை பையில் இருந்து போனை எடுத்து அவரது மனைவிக்கு போன் செய்தேன், உடம்பில் சிறு அசைவுகள் தெரியவே,உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் மனைவியிடம் பொய் சொன்னேன். அவருடைய blood group என்ன என்பதையும் தெரிந்து கொண்டேன். இதற்குள் ambulance வரவே, அவரை தூக்கி ambulanceஇல் கிடத்தி, நானும் ஏறினேன்!


எனது நண்பனுக்கு போன் செய்து, b+ve blood உள்ள யாராவது ஒருத்தரை கூட்டிக்கொண்டு நாங்கள் செல்லும் மருத்துவமனைக்கு வர சொன்னேன், சற்று நேரத்தில் மருத்துவமனை வந்தது. எனது நண்பன் மட்டும்தான் வந்து இருந்தான்.என்ன என்று கேட்டால் அவனுக்கும் அதே ரத்த வகை தானாம். உடனே அட்மிட் செய்தோம். சினிமாக்களில் வருவதை போன்று டாக்டர்களும் நர்ஸ்களும் போவதும் வருவதுமாக இருந்தார்கள்!!!


சற்று நேரத்தில், மருத்துவர் வந்து, வெல் டன் மிஸ்டர் ரவி. சரியான நேரத்துல வந்ததுனால இவர் உயிர் காப்பாத்தபட்டுருக்கு!!! ஒரு வாரத்துல discharge பண்ணிடலாம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்!!!


ஒரு வாரம் கழித்து நான் அலுவலகத்திற்கு இருக்கும் போது குமரன் சார் வந்தார்… தலையில் சின்ன bandage, கையில் புத்தூர் கட்டு. வந்த உடனே மேனேஜர் ரூமுக்கு போய் விட்டார்!!! சற்று நேரத்தில் என்னை கூப்பிட்டு, ப்ரோமோஷன் சான்றிதழையும், increment ஆர்டரையும் கண்ணீர் மல்க கையில் கொடுத்தார்….


நன்றி சொல்லிவிட்டு நேராக T.V.S. SHOWROOM ஐ நோக்கி– நடந்தேன்!!


இப்ப நீங்க சொல்லுங்க நான் என்ன அக்மார்க் நல்லவனா?