அடியேய், தமிழே!

ரெண்டா யிரமாண்டுகளுக்குமுற் பட்டவளே - உயிரு
    முடலும் இணைத்து உலகினுக்கே உருவெடுத்தவளே
உண்டோடி நின்கவி னுக்கோரீடு - நுரையுங்
    கடலும் போலுயிரில் இரண்டறக்கலந்தவளே -நின்னுருவங்
கண்டோ, நித்தமும் பிறவிப்பயனெய்துகிறேன் - வெறும்
    மடலும் கவியும் இயலு மிசையும்
கொண்டா வுனைத் துதிக்கிறேன்? என்னுயிரிழைத்து
    அனுதினமு முனை தொழுது நிற்கிறேன்!