"மன்னித்துவிடு"

வெருமனே,
பழகிப் பழகி புளித்துவிட்டது என்றெண்ணினேனோ-உன்னை
அழவைத்துப் களித்தாகவேண்டுமென எண்ணினேனோ-அடை
மழையில் சுடும் சூரியனைப் போன்று

ஒப்பிலா செயல் செய்தேனோ,
தப்பென்று தெரியாது தோழி-உன் வாழ்வில்
எப்படியும் மறக்கமாட்டாய் என்றெண்ணிதானே

உன்னிடம் சண்டையிட்டேன்- அழுத
கண்ணிரெண்டை பார்த்து நடந்ததை
எண்ணி கூறுகிறேன், என்னை
மன்னித்துவிடு!