நொந்தே மனம் வெதும்புகிறேன் - என்னறிவுச்
சுடரைக் காற்றனைத்ததே - ஞாலந்தந்தே காலஞ்சென்றனன் - என்னருமைத்
தொடரப் பேறில்லையே! நின்னையறிந்து
சிந்தையிற் செதுக்குமுன் சென்றாயே - கூற்றவன்
இடறி யிழுத்தானோ, கூறு? யான்பெற்ற
எந்தையே, என்றும் சிந்தைமுழு துமுனை
படற வைத்தேத் தொழுவேன்!