சிந்தை முழுதும் எந்தை....

நொந்தே மனம் வெதும்புகிறேன் - என்னறிவுச்
     சுடரைக் காற்றனைத்ததே - ஞாலந்
தந்தே காலஞ்சென்றனன் - என்னருமைத்
     தொடரப் பேறில்லையே! நின்னையறிந்து
சிந்தையிற் செதுக்குமுன் சென்றாயே - கூற்றவன்
     இடறி யிழுத்தானோ, கூறு? யான்பெற்ற
எந்தையே, என்றும் சிந்தைமுழு துமுனை
     படற வைத்தேத் தொழுவேன்!