முதல் கவிதை!!!

தோழியின் பிறந்தநாளுக்காக நான் எழுதிய முதல் ஒழுங்கான கவிதை.

சுட்டெரிக்கும் சித்திரையிலும் - நல் இரவில்
தொட்டுத் தொடரும் நித்திரையிலும்

தினந்தினம் காற்றடிக்கும் ஆடியிலும் - நல்ல
மனந்தனை ஏற்றிருக்கும் நண்பர்களூடும்

கார்மேகம் பொழியும் கார்த்திகை மழையிலும்- என்றும்
ஆர்வமின்றி கழியும் கல்லூரி நாட்களிலும்

பனிபோல் படர்ந்த மார்கழி மாலையிலும்- நனி மாங்
கனிபோல் இனிக்கும் எவ்வேளையிலும்

கள்ளங்கபடமில்லா நம்நட்பை மறக்கவில்லை,
உள்ளந்தோறும் மலரும் நினைவுகளையும் துறக்கவில்லை,
சொல்லும் செயலும் உன்னை புறக்கணித்ததுமில்லை,

எப்பொழுதேனும் தப்பிழைத்திருந்தால்
இப்பொழுதே மனத்தினின்று அழித்துவிடு.
அப்படியே  இதையும் அகத்தில் எழுதிவிடு,

 
எனதருமைத் தோழியே,
மனது முழுதுமின்பமாய் -
நீங்காத நினைவுகளுடன்,
மங்காத மகிழ்ச்சியுடன் - இன்றுபோல்
நூறாண்டு வாழவேண்டும்- என்றுமே
மாறாத நட்பும் வேண்டும்.

ஆயிரம் கற்றபோதிலும்- ஆதலால்
வேலை பெற்றபோதிலும்,
உன்துணை ஏற்றபோதிலும்,
உற்ற நண்பனை
முற்றிலும் மறந்துவிடாதே!

நெஞ்சில் மாறா நட்புடன் "இரவிசங்கர்"